Wednesday, October 9, 2013

சொக்லேட் பிரியர்களுக்கு ...!

சொக்லேட் பிரியர்களுக்கு தலையில் இடியை இறக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதால், உலகில் சொக்லேட் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் சொக்லேட் துறை நிபுணர்களின் சந்திப்பு கடந்த வாரம் நடந்தது.

அதில் வரும் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் திகதியோடு உலகத்தில் உள்ள எல்லாம் சாக்லேட் தீர்ந்துவிடும் என்று அவர்கள் கணித்துள்ளனர்.
சொக்லேட் தயாரிக்கத் தேவைப்படும் முக்கிய பொருளான கொக்கோவின் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது.
அதே சமயம் கொக்கோ விளைச்சல் குறைந்து கொண்டே போகிறது.
கொக்கோ விளைச்சலுக்காக பயன்படுத்தப்பட்ட நிலங்கள் தற்போது வேறு விஷயங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கொக்கோ பயன்பாடு குறைவாகத் தான் இருக்கும் என்றும், ஆசியாவில் தான் தேவை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கொக்கோ செடியை வளர்த்தால் கொக்கோ பீன்ஸ்கள் கிடைக்க 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொக்கோ விளைச்சல் குறைந்து கொண்டே போவதால், அதுவும் தீரப் போவதால் இன்னும் சில ஆண்டுகளில் சொக்லேட் விலை வெகுவாக அதிகரிக்குமாம்.
மேலும் அடுத்த 7 ஆண்டுகளில் உலகில் கொக்கோ கிடைக்காது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே வரும் 2020ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதியோடு சொக்லேட் மூடுவிழா காணும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

No comments:

Post a Comment